There were 1,333 press releases posted in the last 24 hours and 401,239 in the last 365 days.

சம்பந்தன் : தமிழ் மக்களுக்கு சமஷ்டி மற்றும் வடகிழக்கு இணைப்பு இல்லை. புத்தமதத்திற்கே முதலிடம்.

சிங்கள தலைமைக்கும் பௌத்தத்திற்கும் அடிமைகளாகிய சுமந்திரனும் சம்பந்தனும். (Click to view enlarged image)

தலைவர்கள் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதில் பயப்படுகிறார்கள், பாதுகாப்பான தீர்வு கிடைக்குமானால் புலம்பெயர்ந்தோர் தாயக்கத்துக்கு படை எடுப்பார்கள்

தற்போதைய தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை தமிழர்கள் எந்தவொரு அரசியல் தீர்வையும் பெறமாட்டார்கள்.”
— Editor

NEW YORK, NEW YORK, USA, January 25, 2019 /EINPresswire.com/ -- சம்பந்தன், வடகிழக்கு இணைந்த சமஷ்டி (கூட்டாட்சி) க்கு தாம் பெற்றுத்தருவோம் என்று தமிழ் மக்களுக்கு 2015 தேர்தலில் வாக்குறுதி அளித்தார்.

கிறிஸ்தவர் சுமந்திரன் தமிழரின் மற்றய சமயங்களிடம் இருந்து அனுமதி பெறாமல் புத்த மதத்தை முதன்மையான சமயமாக ஏற்றுக்கொண்டவர் . இலங்கையில் இந்துக்கள் இரண்டாவது சமயமாக இருக்கையில் இந்துக்களை கேட்காமல் இது போன்ற உறுதி செய்வது ஜனநாயகம் அல்ல.

ஒருவேளை சுமந்திரன் தனது மதத்தில் விசுவாசமாக இல்லாமல் இருக்கலாம் அல்லது புத்த மதத்துக்கு மாற இருக்கலாம், ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்களும் இந்துக்களும் தங்கள் மதத்தில் மிகவும் பக்தியாகவும் விசுவாசமுள்ளவர்களாக உள்ளனர். சுமந்திரன், முஸ்லீம் நாடுகள் போன்ற ஒரு மதச்சார்பான நாடாக இலங்கையை உருவாக்க முயலுகிறார் . உலகெங்கிலும் இருந்து இந்த முஸ்லீம் நாடுகளுக்கு கிடைக்கும் மரியாதையை நாம் அறிவோம். இவர் தீவிர வன்முறையானா சிங்கள மக்களை மேலும் அரேபிய முஸ்லீம் மக்களை விட மிகவும் தீவிரமாக ஆக்குகிறார்

 
சுமந்திரனும் சம்பந்தனும் கூறுவது சமஷ்டி இல்லை, ஆனால் சிங்கள மொழிபெயர்ப்பின் படி எக்கிய ராஜஜா என்பது ஒற்றை ஆட்சியே.

அர்த்தமற்ற, பொய்யான, வெறுமனே செய்கையற்ற , எந்த அர்த்தமும் இல்லாமல், போலி ஆறுதல் கூறும் வார்த்தைகள் தான் சம்பந்தன் தமிழருக்கு செய்யும் அரசியல். கடந்த 10 வருடங்களாக அவரது வார்த்தைகளின் பட்டியல் இங்கே:
குழப்பாதீர்கள்
அமைதியா இருங்கள்
ஒருமித்தநாடு
சமஷ்டி பண்புகளுடன்
சமஷ்டி குணாதிசியனங்கள்
வட கிழக்கு இணைப்பில்லாட்டில் சம்மதியோம்
சமஷ்டி இல்லாத தீர்வுக்கு சம்மதியோம்
நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில்
ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதி செய்யும் வகை
தமிழரின் இலட்சியத்தை நோக்கி செல்கிறோம்
தமிழருக்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்
அடுத்த பொங்கலுக்கு தமிழருக்கு விடுவு
அடுத்த புது வருடத்துக்குள் தமிழருக்கு விடுவு
எல்லா பிரச்சனைகளையும் (வேலையில்லா காணாமல் போனோர் அரசியல் கைதிகள்) தீர்வுக்கு பின்னர் தீர்ப்போம்
என்னிடம் திறப்பு இல்லை அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு
இப்படி பல ஏமாற்று கதைகள்.


அவர் தமிழருக்கு உறுதி கொடுத்த சரியான காரியத்தைச் செய்ய முடியாவிட்டால் (உண்மையில் முடியாது போய்விட்டது), அவர் இராஜிநாமா செய்ய வேண்டும். மற்றும் சாத்தியமான இளம் அரசியல்வாதிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, தமிழருக்கு ஓர் தீர்வு எடுக்க வேண்டும்.


தமிழர்களுக்கு சரியான தீர்வை பெற ஒரு வழி உள்ளது. இது உண்மையான தீர்வை ஸ்ரீலங்கா ஏற்றுக்கொள்ள வலுப்படுத்தும் சக்தியாகும். இந்த வலு கொண்ட நாடு அமெரிக்காவே.

1.அமெரிக்கா 2009 ல் யுத்தத்தை நிறுத்த விரும்பியது. அமெரிக்காவின் போர் கப்பல் தயாராக இருந்தது. ஆனால் சிவசங்கர் மேனன் பல யுக்திகளை பாவித்து அமெரிக்காவை ஏமாற்றினார்.
2. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சிங்களத்துக்கு எதிராக அமெரிக்கா யுத்த குற்றங்களை உறுதிப்படுத்தி ஓர் தீர்மானம் கொண்டுவந்தது.
3. ரணில் பதவி நீக்கத்தை ரத்து செய்து வெற்றி கண்ட நாடு அமெரிக்கா.
4. அக்டோபர் 2018இல், ராஜபக்ச பிரதம மந்திரியாக வந்தவுடன், அமெரிக்கா ராஜபக்சவின் கடந்த ஆட்சியை விசாரணை செய்ய வாஷிங்டண்ணில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதில் உதவி வேண்டுமென்றால், அமெரிக்காவின் உதவியை கேட்டால் அவர்கள் வந்து பிரச்சினையை தீர்த்து வைப்பார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தற்போதைய தலைவர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதில் பயப்படுகிறார்கள், ஏனென்றால், பாதுகாப்பான தீர்வு கிடைக்குமானால் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் தமிழர்கள் தாயக்கத்துக்கு படை எடுப்பார்கள்.

தமிழ் புலம்பெயர்ந்தோர் தாயகத்திற்கு அதிக அறிவாளிகளையும் நிதியுதவியையும் கொண்டு வருவார்கள். இது முழு இயக்கவியலையும் தாயகத்தில் மாற்றிவிடும். தமிழர்கள் வசதியாவும் அறிவாளர்களாவும் இருப்பார்கள். இது தமிழ் சிந்தனையை மாற்றும். அரசியலில் இருந்து வளர்ச்சியற்ற ஜனநாயகத்திற்கும் தமிழருக்கும்விரோதமனா த தே கூட்டமைப்பை தமிழர்கள் தூக்கி எறிவார்கள்.

எனவே தற்போதைய தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை தமிழர்கள் எந்தவொரு அரசியல் தீர்வையும் பெறமாட்டார்கள்.

Editor
Tamil Diaspora News
1 914 713 4440
email us here