பொது வேட்பாளர் பற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்.
* ஜூன் 1/2024 ,சனிக்கிழமை * மாலை 4:00 - 6:00 (நியுயோக் நேரம்). ** நேரலை: https://zoom.us/j/95158186758?pwd=SkZuLzJHWVJqZ1RWbW9JQ1pWSHQwQT09
PARIS, FRANCE, May 30, 2024 /EINPresswire.com/ --நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய பாராளுமன்றத்தில் வரும் ஜூன் முதலாம் திகதி பொதுவேட்பாளரின் பற்றிக் கலந்துரையாடல் சபாநாயகர் கலையழகன் கார்திகேசு தலைமையில் நடைபெறவுள்ளது.
பொது வேட்பாளர் பற்றிய கலந்துரையாடல் நேரலையாக எடுத்து வரப்படும் . கீழ் உள்ள இணைப்பினூடாக பொதுமக்கள் பார்வையிடலாம்.
* ஜூன் 1/2024 ,சனிக்கிழமை
* மாலை 4:00 - 6:00 (நியுயோக் நேரம்)
** https://zoom.us/j/95158186758?pwd=SkZuLzJHWVJqZ1RWbW9JQ1pWSHQwQT09
Meeting ID: 951 5818 6758
Passcode: 519885
Topic: TGTE Monthly Sitting
Time: Jun 1, 2024 04:00 PM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://zoom.us/j/95158186758?pwd=SkZuLzJHWVJqZ1RWbW9JQ1pWSHQwQT09
Meeting ID: 951 5818 6758
Passcode: 519885
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி
About Transnational Government of Tamil Eelam (TGTE)
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, நாலாவது தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.
இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.
தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.
Follow us on Twitter: @TGTE_PMO
Email: pmo@tgte.org
Web: www.tgte-us.org
Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
r.thave@tgte.org
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.
