கஜேந்திரகுமாருக்கு எதிரான புத்த பிக்குகளின் அச்சுறுத்தல்களை ஐ.நா. ஆணையாளர் கவனஞ் செலுத்த உருத்திரகுமாரன் வலியுறுத்தல்

Gajendrakumar Ponnampalam M.P.
"புத்த பிக்குகளின் அச்சுறுத்தல்கள் சிங்கள இனவாத ஆதிக்கத்தின் இன்னுமொரு வெளிப்பாடாகும்"
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வொல்கர் துர்க்குக்கான கடிதமொன்றில், சிறிலங்காவிலுள்ள பாராளுமன்றத்தின் தமிழ் உறுப்பினரொருவருக்கெதிரான அவரது அரசியல் செயற்பாடுகள் காரணமான கடும் அச்சுறுத்தலொன்று தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உயர்ஸ்தானிகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
“சிறிலங்காவிலுள்ள பாராளுமன்றத்தின் தமிழ் உறுப்பினரொருவருக்கெதிரான அண்மைய அச்சுறுத்தலை உங்கள் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் நான் இதை எழுதுகிறேன்.
வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
தமிழர்களுக்கெதிரான மனித உரிமைகள் மீறல்களை எடுத்துக் காட்டுவதில் அவர் செயற்படுநிலையில் உள்ளதோடு, சிறிலங்கா அரசால் தமிழ் மக்களுக்கெதிராக புரியப்பட்ட இனவழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை கோருகிறார்.
தவிர, எந்தவொரு புத்தர்களும் வசிக்காத தமிழ்ப் பகுதிகளில் அரசாங்க ஆதரவுடனான புத்த விகாரைகள் கட்டுமானங்கள் தொடர்பிலும் அவர் கரிசனை காட்டுகிறார்.
இது தமிழர்களின் பாரம்பரிய தாய்நிலத்தில் சிறுபான்மையொன்றாக தமிழர்களை குறைக்கும் சிறிலங்கா அரசின் நகர்வொன்று ஆகும்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வுகளில் தொடர்ச்சியாக மிகவும் செயற்படுநிலையிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் இருந்துள்ளதுடன், தமிழ் மக்களுக்கெதிராக புரியப்பட்ட பாரிய அட்டூழியங்களுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமெனவும் குரல் கொடுக்கிறார்”
தலைநகர் கொழும்பிலுள்ள பாராளுமன்றத்தின் தமிழ் உறுப்பினரான கஜேந்திரகுமாரின் வசிப்பிடத்தை பாரளுமன்றத்தின் சிங்கள உறுப்பினரொருவர், பல சிங்கள புத்த பிக்குகள் தலைமையிலான பாரிய சிங்களக் கூட்டமொன்று இம்மாதம் 26ஆம் திகதி சூழ்ந்துள்ளது. அந்நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், அவரது குடும்பத்துடனும், வயதான தாயாருடனும் அவரது வசிப்பிடத்தினுள்ளே இருந்ததாக கடிதம் தொடருகிறது.
“பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கெதிராக கூக்குரல் எழுப்பிய சனக்கூட்டமானது கோஷங்களை எழுப்பியதுடன், அவரது அரசியல் செயற்பாடுகளையும், தமிழ்ப் பகுதிகளில் புத்த விகாரைகளின் கட்டுமானத்துக்கெதிரான அவரது எதிர்ப்பையும் அவர் கைவிடாமல் விட்டால் பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அச்சுறுத்தியது”
இச்சம்பவமானது சிங்கள இனவாதம், ஆதிக்கத்தின் இன்னொரு வெளிப்பாடாகும். மேலதிகமாக, தமிழர்களுடன் எவ்விதமான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை சிங்கள அரசியல் தலைமைத்துவம் அனுமதிக்காது என்ற விடயத்தை மீள எடுத்தியம்புகிறது என கடிதம் தொடருகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொருத்தமான நகர்வுகளை எடுக்குமாறு குறிப்பாக எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை அமர்வு வரைக்கும் வலியுறுத்தவே நான் எழுதுகிறேன்.
தவிர, எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் சபை அமர்வின் போதான இலங்கை மீதான அறிக்கையில், இச் சம்பவத்தை குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரொருவரின் பாதுகாப்பானது மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண தமிழ் மக்களின் பாதுகாப்பை இலங்கைத் தீவில் ஒருவரால் நினைத்துப் பார்க்க முடியும் என கடிதம் முடிவடைகிறது.
UN Rights Chief Urged to Address Threats by Sinhalese-Buddhist Clergy Against Tamil Parliamentarian Ponnambalam - TGTE
https://www.einpresswire.com/article/652483464/un-rights-chief-urged-to-address-threats-by-sinhalese-buddhist-clergy-against-tamil-parliamentarian-ponnambalam-tgte
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி
About Transnational Government of Tamil Eelam (TGTE)
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.
இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.
தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.
Follow us on Twitter: @TGTE_PMO
Email: pmo@tgte.org
Web: www.tgte-us.org
Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter
Instagram
Other
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.
