There were 194 press releases posted in the last 24 hours and 450,024 in the last 365 days.

இராஜபக்சக்களை, சிங்கள மக்களின் நோக்கு நிலையில் தமிழ்மக்கள் நோக்கவில்லை - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Gothabaya Rajapakse

"சிங்கள மக்களின் கோபத்துக்கான காரணங்களும், தமிழ்மக்களின் கோபத்துக்கான காரணங்களும் வேறானவை"

போராட்டக்காரர்கள் அறிவிப்பில், சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு காரணிகளில் ஒன்றாக இராணுவச் செலவினங்கள் குறைப்பு பற்றியோ, தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும் பற்றியோ பேசவில்லை”
— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
NEW YORK, UNITED STATES, July 11, 2022 /EINPresswire.com/ --

சிறிலங்காவின் ஆட்சிக்கதிரையில் இருந்த இராஜபக்ச தரப்பினருக்கு எதிரான சிங்கள மக்களின் கோபத்துக்கான காரணங்களும், தமிழ்மக்களின் கோபத்துக்கான காரணங்களும் வேறானவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மாறியநிலையில் இதற்கு காரணம் ஆட்சியாளர்களின் பிழையான நிர்வாகம், ஊழல் என்ற கோணத்திலேயே சிங்கள மக்களின் கோபம் கொதித்தெழுந்தது. ஆனால் தமிழ்மக்களின் கோபம் வேறானவை. அதனால்தான் போராட்டத்தில் பங்கெடுக்காது பார்வையாளர்களாக இருந்துள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவிக்கையில், உலகத் தமிழர்களை பொறுத்தவரையில் இராஜபக்சக்களை இனப்படுகொலையாளிகளாவே பார்கின்றனர். 2009ம் தமிழினப்படுகொலையின் வடுக்களும் ஆழ்மனக்கோபமும் மக்களிடம் ஆறாது இன்னமும் இருக்கின்து. அதனால்தான் தென்னிலங்கை மக்கள் கிளர்ச்சியின் காரணமாக ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்ட போது, உலகத்தமிழ்மக்கள் தமது மகிழ்சியினை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால் தமிழனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா அரசினையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதே தமிழர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.

இதேவேளை சிறிலங்கா அதிபர் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் வழங்கிய பொதுஅறிவிப்பில், சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறைப்பு பற்றியோ, அதனோடு தொடர்புடையதாக தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும் என்பது பற்றியோ பேசவில்லை. இலங்கைத்தீவு முழுவதுக்குமான நிரந்த அமைதிக்கு தமிழர்களின் இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பது பற்றியோ பேசவில்லை என்பது தமிழ்மக்களிடத்தில் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாதம் ஊறிப்போயுள்ள சிறிலங்காவின் அரசியல் சமூக நீரோட்டத்தில் ஆக்கபூர்வமான சட்டத்தின் ஆட்சியினை வெளிப்படுத்துகின்ற ஓர் அரசியல் மாற்றத்தினை காணவேண்டும் எனில்,

- ஐ.நா மனித உரிமைச்சபை அறிவிறுத்தியபடி சர்வதேச சட்டநியமத்தின்படி 'ரோம்' உடன்படிக்கையின் பின்னோக்கியதாக ஒப்பமிடவேண்டும்.

- தமிழர்கள் தமது அரசியல் தலைவிதியினை தாமே தீர்மானிக்கின்ற வகையில் அதற்கான ஓர் அரசியல் வெளியினை வழங்க வேண்டும்.

- மூன்றாவதாக இராணுவச் செலவினங்களின் குறைப்பின் பிரதானபகுதியாக தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இந்த மூன்று விடயங்களுமே தமிழர்களின் இன்றைய நிலைப்பாடு மட்டுமல்ல எதிர்பார்பாகவும் உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.


* நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி *
About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நா.க.த.அ. இன் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

Follow on Twitter: @TGTE_PMO

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.