There were 1,725 press releases posted in the last 24 hours and 403,709 in the last 365 days.

ஈடுசெய்நீதியை சர்வதேசம் எமக்கு தர வேண்டும் : ஜெனீவாவில் தாய்மார்கள் கோரிக்கை !

Tamil Mothers at UNHRC 2020

உள்நாட்டு நீதிமன்றில் விசாரணையினை தாம் மேற்கொள்ள இருப்பதான சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் நிலைப்பாட்டினை முற்றாக நிராகரித்த தாய்மார்கள்

GENEVA , SWITZERLAND, February 26, 2020 /EINPresswire.com/ --

சர்வதேச சமூகம் சிறிலங்காவில் முன்னெடுத்த நிலைமாறுகால நீதி சிறிலங்கா அரசினால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், எமக்கு பரிகாரநீதியினை சர்வதேச சமூகம் தரவேண்டும் என காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களது தாய்மார்கள் ஜெனீவாவில் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 43ஆம் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளில், ஐ.நா தீர்மானத்துக்கு வழங்கிய அனுசரணையில் தாம் வெளியேறுவதாக சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தாய்மார்கள் இக்கோரிக்கையினை சர்வதேச சமூகத்தை நோக்கி முன்வைத்துள்ளனர்.

சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்பட்டத்தியோ அல்லது, இனப்படுகொலையினை தடுப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கைக்கு அமைய,சிறிலங்கா இனப்படுகொலை அரசினை, அனைத்துலக நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தியோ, தமக்கான பரிகார நீதியினை சர்வதேச சமூகம் தரவேண்டும் என தாய்மார்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை உயர்நீதிமன்ற நீதிபதியூடாக உள்நாட்டு நீதிமன்றில் விசாரணையினை தாம் மேற்கொள்ள இருப்பதான சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் நிலைப்பாட்டினை முற்றாக நிராகரித்த தாய்மார்கள், குற்றத்தை செய்தவர்களே குற்றத்தினை விசாரிக்க முடியாது எனவும், இக்குற்றங்களை விசாரிப்பதற்குரிய சட்ட ஏற்பாடுகள் சிறிலங்காவின் நீதிபரிபாலனத்தில் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



Videos' of the Press Conference:

1) https://youtu.be/mDBYpLL7bDs

2) https://youtu.be/dQxLkzUxIlM

3) https://youtu.be/z2mAqaq7aoY


Tamil Mothers of the Disappeared
Tamil Mothers of the Disappeared
+33 7 55 16 83 41
email us here