There were 1,914 press releases posted in the last 24 hours and 403,114 in the last 365 days.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

Families of disappeared

Families of disappeared

அமெரிக்கா,கனடா,பிரித்தானியா,பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், ஒஸ்றேலியா, ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுவது மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இடம்பெறுகின்றது

NEW YORK, USA, August 29, 2019 /EINPresswire.com/ --

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக புலம்பெயர் தமிழர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துகலக நாளான ஓகஸ்ற் 30 அன்று அணிதிரள தயாராகி வருகின்றனர்.

இந்நாளையொட்டி தமிழர் தாயகத்திலும் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. இப்போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இப்போராட்டங்களை புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்து வருகின்றது.

அமெரிக்கா,கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுவது மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இடம்பெறுகின்றது.

1: France
Trocadéro (துறோக்கட்றோ) மனித உரிமைச் சதுக்கத்தில் மாலை 16 மணி முதல் 18:30 மணி வரை

2: Canada
11am to 4 pm : Dundas Square. toronto
18h pm to 9h pm
Milliken Mills Community Centre, North Hall, 7600 Kennedy Rd, (between Denison and 14th Ave) Markham, ON L3R 9S5

3: UK
12h30 pm to 4h pm
North Terrace, Trafalgar Square, Lonodon

4: Germany
Herzog Christoph Denkmal platz
Stuttgart Stadmitte

5: USA
10h am to 12 am
National Press Club
Floor 13 , Murrow Room, 529 14th NW. Washington Dc 20045

6: Australia - Sydney
7 am to 9 am
sydney main railway station

உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் சிறிலங்கா இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான நீதியைத் வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஓகஸ்ற் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டில் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம் : http://youarenotforgotten.org/

http://www.naathamnews.com/aug-30-tamil-diaspora/

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.